அப்பாவான செம்பருத்தி தொடரின் நடிகர்! என்ன குழந்தை தெரியுமா? அரிய புகைப்படத்துடன் வந்த குட்நிவூஸ்
செம்பருத்தி தொடரில் நடித்த விஜே கதிருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
செம்பருத்தி சீரியலில் அருண் என்ற கேரக்டரில் அதாவது ஆதியின் சகோதரராக நடித்திருந்தவர் விஜே கதிர்.
இவர் ஆண்டு ஜூலை மாதம் சிந்து என்பவரை திருமணம் செய்தார்.
அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் தனது மகளுக்காக எழுதிய கவிதை வைரலாகி வருகிறது.
அந்த கவிதை இதோ
ஆயிரம் உறவு என்னை அழைத்தாலும் "அப்பா" என்ற ஒற்றை வார்த்தையில் என்னை கட்டி இழுக்க வந்த "ஆசைமகளே" ஆயுள் முழுவதும் உந்தன் முழுமதி முகத்தில் மலரும் புன்னகை கண்டே எந்தன் நாட்கள் நகர வேண்டுமடி வைரமே இந்த பதிவில் விஜே கதிர் மேலும் கூறியபோது, ‘என் இளவரசி! இன்று மகள்கள் தினத்தை கொண்டாடும் ஒவ்வொரு தந்தைக்கும் வாழ்த்துக்கள்.
நானும் என் மகளுடன் மகள்கள் தினத்தை கொண்டாடுகிறேன்.
ஆம்...,எங்கள் வீட்டிற்கு அழகான இளவரசி வந்துள்ளார். அவர் எங்கள் வீட்டை அலங்கரித்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.