யாழ் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் மெய்சிலிர்கும் வரலாறு!
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தொன்டைமானாறு எனும் இடத்தில் அமைந்துள்ள தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வரலாற்றை நோக்கினால் இது கந்தபுராணத்துடன் தொடர்புடையதாக அறியப்படுகின்றது.
இங்கு ஓடும் தொண்டமான் ஆறு “வல்லி நதி என்ற பெயருடன் விளங்கியது. இந்த நதியின் தொடு வாயிலை தொண்டமான் என்னும் அரசன் வெட்டிக் கடலுடன் சங்கமிக்க விட்டான்.
அன்று முதல் இந்நதியின் பெயர் “தொண்டமானாறு” ஆகிவிட்டது. கந்தப்பெருமானது அருளாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வாலயத்திற்கு தெய்வீக வரலாறு உண்டு.
திருச்செந்தூர் என்னும் பகுதியிலிருந்து கந்தபெருமான் வீரவாகுத்தேவரை மகேந்திரபுரிக்கு சூரனிடத்தில் தூது அனுப்பினான். வீரவா குத்தேவர் முதன்முதலாக வட இலங்கையின் வல்லிநதிக்கரையில் உள்ள கல்லோடையில் காலடி எடுத்து வைத்தார். அவரது பாதச்சுவடுகள் இன்றும் ஆலயத்தின் வடக்குப்பக்கத்தில் பாதச்சுவடுகளாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் வரலாற்று சிறப்புகள் தொடர்பில் முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |