கதறவிட்ட கணவன்: வலி தாங்க முடியாமல் துடிதுடித்த மனைவி! இறுதியில் பரிபோன உயிர்
கணவர் குடித்து வந்து சண்டையிட்டுள்ள நிலையில், ஆசிரியர் ஒருவர் கணவரை அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அத்தனூர்பட்டி கிராமத்தை சேர்ந்த சித்தன் மகன் மணிகண்டன் (35). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னாரம்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான இளமதியை (30) பெற்றோர் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தக்சிந்த்(10) என்ற மகனும், அக்சிதா (6) என்ற மகளும் உள்ளனர்.
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மணிகண்டன் கொரோனா காரணமாக வேலைக்கு செல்லாமல் குடிபழக்கத்திற்கு அடிமையானர். இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் மீண்டும் மனைவி இளமதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதுடன், அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவத்தன்று அடித்து கொடுமை படுத்திய கணவரை வலி தாங்க முடியாமல் துடித்த இளமதி, அருகில் கிடந்த உருட்டு கட்டையால் சரமாரியாக கணவனை தாக்கியுள்ளார்.
இதில் கணவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தகவறிந்து வந்த பொலிசார் இளமதியை கைது செய்ததோடு, இறந்த மணிகண்டனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.