திரையுலகில் பரபரப்பு! அடுத்த மாதம் நிச்சயதார்த்தம்... 25 வயது இளம் நடிகை காதலருடன் விபத்தில் பலி
25 வயதே ஆகும், மராத்தி நடிகை ஈஸ்வரி தேஷ்பாண்டே மற்றும் அவரது காதலர் எனப்படும் சுப்பம் தாட்கே ஆகியோர், கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 20, ஆம் தேதி) அன்று காலை, கோவாவின் ஹட்ஃபேட் கிராமத்திற்கு அருகே அதிகாலை 5 மணியளவில் இவர்கள் இருவரும் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.
ஈஸ்வரி தேஷ்பாண்டேவின் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், கார் ஒரு ஓடையில் மோதி அருகே இருந்த சிற்றோடையில் விழுந்ததால், இந்த கோர விபத்து நடந்துள்ளது.
ஈஸ்வரி மற்றும் அவரது காதலர் சுப்பம் இருவரும், இந்த விபத்தில் நீரில் மூழ்கி இறந்தனர். மேலும் ஈஸ்வரி தேஷ்பாண்டேய பலரும் சுப்பம் இருவரும், இந்த ஆண்டு அக்டோபரில் நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதற்குள் இப்படி ஒரு விபத்து இவரால் இருவரின் உயிரையும் பறித்துள்ளது.