பிரபல இளம் கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்: வெறும் 28 வயதில் ஏற்பட்ட சோகம்
இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சவுராஷ்டிரா கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பருமான அவி பரோட் (29). 19-வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவி பரோட் 38 முதல் தர போட்டிகளில் விளையாடியவர்.
21 ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடியுள்ள அவி பரோட் மரணம், அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதகா தெரிவித்துள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கம், அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும் அவரது ஆன்மா சாந்தியடையை எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதகவும் தெரிவித்துள்ளது.
2019-20 ஆண்டு ராஞ்சி கோப்பையை வென்ற சவுராஷ்டிர கிரிக்கெட் அணியில் அவி பரோட் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 29-வயதே ஆன கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம் அடைந்து இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.