ஒமிக்ரான் ஆட்டம்! சவுதி அரேபியாவில் ஒருவர் பாதிப்பு; எச்சரிக்கை
கொரோனா வைரஸ் ஆனது பல வகைகளி உருமாறி பரவி வந்த நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புது வகையான வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டு பரவி வருகிறது.
மற்ற ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா வைரஸ்களை விட இந்த புதிய உருமாறிய வைரஸ், அதிபயங்கரமானது, 50 பிறழ்வுகளை கொண்டுள்ளது என மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஒமிக்ரான் என்ற இந்த வைரசுக்கு உலக சுகாதார அமைப்பு பெயரிட்டு, அதன் நிபுணர் குழு இந்த வைரசை இரவு பகலாக ஆராய்ந்து வருகிறது. இந்த ஒரு வார காலத்திற்குள் ஒமிக்ரான் வைரஸ் 14-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் தடம் பதித்து, உலகை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஐரோப்பியாவில் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான் ஆனது தற்போது சவுதி அரேபியாவுக்கு வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவருக்கு ஒமிக்ரான் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்டவரும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.