சனி உதயம் : ஏப்ரல் 22 இன் பின் இந்த ராசிகள் பண விஷயத்தில் கவனம் தேவை
கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் சனி பகவான் அஸ்தமனமாகி, பலவீனமான நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி சனி பகவான் உதயமாகவுள்ளார்.

சனி உதயம்
வேத ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் முக்கியமாக கருதப்படுகின்றார். நாம் என்னென்ன பாவ புண்ணியம் செய்கின்றோமா அந்த வகையில் சனி பகவான் நமக்கு பலன்களை அள்ளி தருவார்.
இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மேலும் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதி சனி பகவான் தான்.
கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் சனி பகவான் அஸ்தமனமாகி, பலவீனமான நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி சனி பகவான் உதயமாகவுள்ளார்.

சனி பகவானின் இந்த மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை உண்டாக்கும். ஆனால் குறிப்பிட்ட ராசிகளின் வாழ்க்கையில் முக்கியமாக நிதி ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
அந்த ராசிகள் யார் என்பதையும் அவர்கள் எதனால் இன்னும் பலன்களை அனுபவிக்க போகின்றனர் என்பதையும் பார்க்கலாம்.

சிம்மம்
- சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். பணம் சம்பாதிக்கும் முயற்ச்சி தோல்வி அடையும். உங்கள் எங்களுக்கு திரும்ப கிடைக்காது. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். எதற்கும் அவசரம் வேண்டாம். தொழிலில் மிகவம் கவனம் தேவை. பண கொடுக்கல் வாங்கல் வேண்டாம். முதலீடு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
- கடக ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். உங்களுக்கு எச்சரிக்கை தேவை. உதிரிகளை இனம்காண்பீர்கள். கடின உழைப்பு மட்டுமே வெற்றியை கொடுக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை புறக்கணித்தால், மருத்துவ செலவுகளை அதிகமாகும். பண விஷயத்தில் கவனம் தேவை. மொத்தத்தில் அவசரம் பெரும் இழப்புகளுக்கு வழிவகுக்கும்.
விருச்சிகம்
- விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக இருக்கும். பிடிவாதம், கவனக்குறைவு, ஆணவம் போன்றவற்றை தவிர்க்கவும். யாருடனும் மோதல்களில் ஈடுபட வேண்டாம். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குறுக்குவழியில் பணத்தை சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம். எல்லாத்திலும் நஷ்டம் வரும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).