மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்: இந்த 4 ராசிகளுக்கு இனி ராஜ வாழ்க்கை தான்!
ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் நிலைக்கு அதிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுட காரணம் கிரக நிலைகள் மற்றும் கிரக சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜ யோகங்கள் என்பன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
குறிப்பாக சனியின் பெயர்ச்சி, நட்சத்திர மாற்றம், ராசி மாற்றம், அஸ்தமனம் மற்றும், உதயம் என அனைத்துமே ஜோதிட பிரகாரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. நீதியின் கடவுளாக அறியப்படும் சனி பகவான் ஒருவருடை பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் போதே பலனை கொடுத்துவிடுவார்.

சனி பகவான் தற்போது மீன ராசியில் சஞ்சரிப்பதுடன், அஸ்தமன நிலையில் இருக்கின்றார் இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 22, ஆம் திகதி மீண்டும் மீன ராசியில் உதயமாகவுள்ளார்.
இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலித்தாலும் சில ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் பெரும் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள். அவை எந்தெந்த ராசிகள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு, சனி பகவான் 11-ஆம் வீட்டில் உதயமாவதால், இவர்களின் பொருளாதார நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் ஏற்றம் உண்டாகப்போகின்றது.
நீண்ட கால கடின உழைப்புக்கான பலன்களை இந்த காலகட்டத்தில் அனுபவிக்கும் நிலை உருவாகும். பல வழிகளிலும் வருமானம் அதிகரிக்கும்.
இதுவரை காலமும் இருந்துவந்த கடன் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனிபகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், தொழில் ரீதியில் அமோக முன்னேற்றம் நிலவும்.
புதிய தொழில் தொடங்க வேண்டும் என நீண்ட காலம் போராடி வந்தவர்களுக்கு அதற்காக வாய்ப்புகள் கூடி வரும். சனி கொடுக்க நினைத்தால் யாராலும் தடுக்க முடியாது என்ற கூற்றுக்கு ஏற்ப இந்த காலகட்டம் மிதுனத்துக்கு பொற்காலமாக இருக்க போகின்றது.
தொட்டதெல்லாம் வெற்றியாகும் அதிர்ஷ்டகர்மான காலகட்டத்தை இந்த ராசியினர் அனுபவிக்கப்போகின்றார்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 5-ஆம் வீட்டில் நடக்கும் சனியின் சஞ்சாரம் நிகழ்வதால், இந்த ராசியினரின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் இதுவரையில் இல்லாத முன்னேற்றத்தை கொடுக்கப்போகின்றது.
புதிய முதலீடுகள் செய்வதற்கான யோகம் கூடிவரும் அதே வேளை முன்னைய முதலீடுகளில் இருந்தும் எதிர்ப்பாராத வகையில் அதிக லாபம் கிடைக்கும்.
திருமண வாழ்க்கையில் இதுவரையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
மகரம்

சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால், மகர ராசியினர் வாழ்வில் பல்வேறு வழிகளிலும் சாதக பலன்கள் கிடைக்கப்போகின்றது.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக செய்துமுடிப்பதற்கான யோகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும்.
புதிய சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். பரம்பரை சொத்துக்களால் பயன்பெற கூடிய யோகம் காணப்படுகின்றது. மொத்தத்தில் இந்த ராசியினரின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |