சரிகமப- வில் நடுவருக்கு போட்டியாளர் கொடுத்த பரிசு... அரங்கத்தையே சிரிப்பில் ஆழ்த்திய தருணம்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இசை நிகழ்ச்சி தான் சரிகமப. அதன் சீசன் 5 தற்போது இடம்பெற்று வருகின்றது.அதில் போட்டியாளரொருவர் நடுவர் விஜய் பிரகாஷ்க்கு கொடுத்த பரிசு அரங்கத்தையே சிரிப்பலையில் ஆழ்த்தியது.
சரிகமப
சரிகமப ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடகர் ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் மற்றும் சைந்தவி ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.
சரிகமப சீசன் 5 தற்போது முதற்கட்டத்தை முன்னேற்றமாக நடத்திக்கொண்டு வருகின்றது. அதாவது இந்த வாரமும் Introduction Round நடைபெறும். இதில் கடந்த வாரம் பங்கு பற்றாத போட்டியாளாகள் பங்கு பற்றுவார்கள்.
இதில் கடந்த வாரம் பல போட்டியாளர்கள் சிறப்பாக பாடல் பாடி அசத்தி இருந்தனர். மொத்தமாக 26 போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு தெரிவாகி உள்ளனர்.
இந்த நிலையில் போட்டியாளர் ஒருவர் நடுவர் விஜய் பிரகாஷ்க்கு கொடுத்த பரிசு காரணமாக நிகழ்ந்த நகைச்சுவை காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |