ஒட்டுமொத்த அரங்கையும் கண்ணீரில் ஆழ்த்திய பாடகி சைந்தவி ! வைரலாகும் காணொளி
வாழ்க்கையில் கடினமான சூழ்நிலைகளையும் மிகுந்த பொறுமையுடன் கடந்து வரும் பாடகி சைந்தவி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சரிகமப மேடையில் பாடிய பாடல் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி பிரிவு
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை பெற்றோர்கள் சம்பதத்துடன் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்தின் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து 2020ம் ஆண்டு தான் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் இவர்களது திருமண வாழ்க்கை மேலும், சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சைந்தவி மற்றும் ஜி.வி. பிரகாஷ் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தனர்.

சமீபத்தில், நீதிமன்றம் இவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கிய செய்தியும் இணையத்தில் வைரலானது. விவாகரத்துக்கு பின்னரும் தனது மகளுக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்து வருகின்றார்.

சாதாரணமாக விவாகத்து பெற்ற பின்னர் யாராக இருந்தாலும் மனதளவில் பெரும் போராட்டங்களையும் உணர்வு ரீதியாக தாக்கத்தையும் அனுபவித்தே ஆகுவார்கள். இதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதான விடயம் கிடையாது.
ஆனால் இப்படி தான் பொறுமையாகவும் ஆளுமையுடனும் இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த வாழும் உதாரணமாக திகழும் பாடகி சைந்தவி சரிகமப மேடையில் பாடிய உருக வைக்கும் பாடல் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலைாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |