சரிகமப-வில் மகளுடன் வந்த நடிகை தேவயானி: போட்டியாளரால் கண்கலங்கிய தருணம்
சரிகமப மெஹா ஒடிசனில் நடிகை தேவையானியின் மகள் மற்றும் போட்டியாளர் அருண் பாடிய பாடலுக்கான காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
சரிகமப 5
சரிகமப சீசன் 5 இன்று ஆரம்பமாகிறது இதில் பல திறமைவாய்ந்த போட்டியாளர்கள் பங்குபெற இருக்கின்றனர். தற்போது மெஹா ஓடிஷன் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
கடந்த வாரம் சிறப்பான பல போட்டியாளர்கள் பங்குபற்றி போட்டியில் தேர்வாகி இருந்தனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் மெஹா ஓடிசன் நடைபெற இருக்கின்றது.
இதில் தற்போது வெளியாகிய காணொளியின்படி நடிகை தேவயானியின்மகள் பங்கேற்று போட்டியில் தொடர தெரிவாகியுள்ளார். இதில் அடுத்த போட்டியாளராக அருண் எனும் போட்டியாளர் தெரிவாகி இருந்தார்.
இவரின் அண்ணன் திருநங்கை. இதன்போது மேடையில் திருநங்கையின் பேச்சால் அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்கலங்கினர்.
இதன் பின்னர் நடுவர் விஜய் பிரகாஷ் அவரை அழைத்து 'உங்கள் தம்பி பாடும் போது இனிமேல் நீங்கள் தான் அவருக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்' என அவரை கௌரவபப்டுத்திய தருணம் பெருமைக்குரியதாக இருந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |