சரிகமப-வில் மீண்டும் வந்த யோகஸ்ரீ...ஒரே சொல்லால் எழுந்து நின்ற நடுவர்கள்
சரிகமபவில் சினேகன் மூலமாக வந்த போட்டியாளருக்கு யோகஸ்ரீ கொடுத்த பரிசிற்கு நடுவர்கள் எடுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.
சரிகமப
தற்போது சரிகமப 5 சீசன் நடந்து கொண்டு வருகின்றது. இதில் கடந்த சீசனில் வழிநடத்தி சென்ற நடுவர்கள் அனைவரும் பங்கு பற்றி உள்ளனர்.
அந்த வகையில் கடந்த சீசன் 4 வில் பங்குபற்றி இரண்டாம் இடத்தை தட்டி தூக்கியவர் தான் யோகஸ்ரீ அவர் இந்த சுற்றில் கலந்துகொண்டுள்ளார்.
அதாவது சினேகன் மூலமாக சரிகமபவிற்கு வருகை தந்த போட்டியாளர் தற்போது நடிகர் விஜய் பாடலை பாடி நடுவர்களிடம் பாராட்டு வாங்கி உள்ளார்.
அவருடைய அதே ஊரை சேர்ந்தவர் தான் யோகஸ்ரீ இவர் மீண்டும் சரிகமப மேடைக்கு வந்து தன்னுடைய குலதெய்வ கோவிலில் இருந்து வணங்கி கொண்டு வந்த ஒரு கயிறை அந்த போட்டியாளரிடம் கொடுக்க நடுவர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்து இருந்தனர்.
அதாவது தன்னுடைய ஊருக்காக யோகஸ்ரீ எப்படி பெருமை தேடி கொடுத்தாரோ அதே போல நானும் தேடி கொடுப்பேன் அந்த கடமை எனக்கும் உள்ளது என அந்த போட்டியாளர் மேடையில் கூறினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |