சிவகார்த்திகேயன் நம்பர் கொடு.. சரிகமப திவினேஷ் அனுபவித்த கொடுமை-கண்கலங்கிய ஏன்?
சரிகமப நிகழ்ச்சி டைட்டில் வென்ற பின்னர் திவினேஷ் கொடுத்த பேட்டி காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சரிகமப நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பாடகர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகின்றன.
வழக்கம்போன்று இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கருப்பொருள் வைத்து இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவுகளில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில், ஜூனியர் கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி நடை பெற்று முடிந்துள்ளது.
இந்த சீசனில், திவினேஷ் டைட்டில் பட்டத்தை வென்றுள்ளார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது. அத்துடன் “ மெல்லிசை இளவரசன்” என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், திவினேஷின் திறமையை பாராட்டி, செல்பி எடுத்து கொண்டார்.
சிவகார்த்திகேயன் நம்பர் கேட்டார்களா?
இந்த நிலையில், சரிகமப நிகழ்ச்சி முடிந்த பின்னர் போட்டியாளர்களில் சிலர் பேட்டி கொடுத்துள்ளனர். அதில், பகிர்ந்து கொண்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
திவினேஷ் பேசுகையில், “ எனக்கு முதன் முதலில் பாட கற்றுக் கொடுத்ததே என்னுடைய தாத்தா தான். என்னுடைய தாத்தாவை ரொம்ப பிடிக்கும். தாத்தா, வீட்டில் பாடுற பாடல்களை கேட்டு தான் நான் பழகினேன். அந்த பாடல்களை தான் என்னுடைய அப்பா, அம்மாவிடம் பாடி காட்டுவேன்.
அப்போ நான் பாடுவதை பார்த்த அம்மா தான் சரிகம நிகழ்ச்சிக்கு அழைத்துப் போகலாம் என்று முடிவு செய்தார். நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றிக்கு கிடைத்த பணத்தை குடும்ப கடன்களை அடைக்க பயன்படுத்தினார்கள். அதிலும் சிலர் சிவகார்த்திகேயன் போன் நம்பர் கேட்டு அலப்பறை செய்தார்கள். நான், அது அவரிடம் தான் இருக்கும் என்று கூறினேன்..” என புன்னகையுடன் பேசியிருந்தார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |