சரிகமப-வில் முதல் தெரிவு சுற்றிலேயே வெற்றியை அடித்து தூக்கிய போட்டியாளர்
சரிகமபவில் இந்த வாரம் இறுதி கட்டத்திற்கான முதல் தேர்வுச்சுற்று அத்தியாயம் ஆரம்பித்துள்ளது. இதில் போட்டியாளர் சிறப்பான பாடலை பாடி பாராட்டு பெற்றுள்ளார்.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் தற்போது மனம் கவர்ந்த இசை நிகழ்ச்சியாக வலம் வரும் நிகழ்ச்சி சரிகமப நிகழ்ச்சி தான். இதில் மிகவும் திறமை வாய்ந்த போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
எனினும் நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வாரமும் மக்களால் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
கடந்த வாரம் பக்தி திருவிழா போட்டியில் இருந்து இரண்டு போட்டியாளர்களான ஷ்ரஜான்வீ மற்றும் அக்ஷதா வெளியேறி சென்றனர். இதனை தொடர்ந்து இந்த வாரம் இறுதிக்கட்டதிற்கான முதல் தெரிவு சுற்று (Ticket to Finale) ஆரம்பிக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களும் சிறப்பாக பாடக்கூடியவர்கள். ஆனால் ஐவர் மட்டுமே இறுதிக்கட்டத்தை நோக்கி செல்ல தெரிவு செய்யப்படுவார்கள்.
இதில் தற்போது வெளியாகி இருக்கும் காணொளியின் படி போட்டியாளர் ஹேமித்ரா அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட என்ற பாடலை பாடி சிறப்பா பாராட்டுக்களை பெற்றுள்ளார். இது நாளை ஒலிபரப்பப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |