சந்திர கிரகணம் 2022 ; இந்த ராசிக்கு இனி ராஜயோக அதிர்ஷ்டம் தானாம்!
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மே 16 அன்று முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்த கிரகணம் இந்தியாவில் காணப்படாது. ஆகையால் கிரஹண விதிகளையும் இந்த நேரத்தில் கடைபிடிக்க வேண்டாம்.
மே 16 அன்று பவுர்ணமி. பவுர்ணமியுடன் கூடிய சந்திர கிரகணத்திற்கு விசேஷ பலன் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த கிரகணம் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
மேஷம்
மேஷம் ராசியினர்கள் சந்திரகிரகணம் அனுகூலமான பலன்களை தரும். தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். வேலையிலும் வெற்றி உண்டாகும்.
ரிஷபம்
ரிஷபம் ரிஷப ராசியினர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தால், அனுகூலமான பலன்களை தரும். இந்த காலத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.
இந்த காலத்தில், பெரிய வெற்றிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த முக்கியமான வேலைகள் முடியும்.
சூரிய பெயர்ச்சியால் அரங்கேறும் அதிர்ஷ்டம்! இந்த ராசிகளின் தலைவிதி மாறப் போகிறதாம்
சிம்மம்
சிம்ம ராசிக்கு, சாதகமாக அமையும். அவர்கள் சில இனிமையான தகவல்களை பெறக்கூடும். பண வரவு அதிகமாகும்.
நிதி நிலையை பலப்படுத்தும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களால் அனுகூலமான சூழல் நிலவும்.
கடகம்
கடக ராசிக்கு சந்திரன் அதிபதி என்பதால், இந்த ராசிக்கு சந்திரகிரகணம் கெட்ட பலனை ஏற்படுத்தாது.
கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் மட்டுமே கிடைக்கும். உறவுமுறைகள் மேம்படும். உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்கு இந்த கிரகணம் சுபகாலத்தை அளிக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றியை காணலாம்.
புதிய பணிகளை தொடங்குவீர்கள்.
இந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிறிய தவறும் இழப்பை ஏற்படுத்தலாம்.