சனியின் வக்கிர பெயர்ச்சி! 3 மாதங்கள் ராஜயோகத்தை அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நீதியின் கடவுளான சனி தேவன் சனி பகவான் தனது ராசியை மாற்றி மகர ராசியில் வக்ர நிலையில் அதாவது பிற்போக்கு இயக்கத்தில் இருக்கிறார்.
மகர ராசியில் சனி பகவானின் பிற்போக்கு இயக்கம் அனைத்து ராசிகளிலும் சுப மற்றும் அசுப பலன்களை தரும். எனினும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இன்னும் 3 மாதங்கள்மிகவும் நல்ல நேரத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த காலத்தில், மகர ராசியில் சனி எதிர் திசையில் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களின் விதியை மாற்றி அபரிமிதமான பலன்களை தருகிறார். அந்த அதிர்ஷ்டத்துடன் கூடிய ராசிகள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
சனி பகவான் மேஷ ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தின் பத்தாம் வீட்டில் பிற்போக்கு நிலையில் இருக்கிறார். ஜாதகத்தின் இந்த வீடு தொழில் மற்றும் வேலை சார்ந்தது.
இதனால், வேலை தேடும் மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
பணியிடத்தில் உங்கள் பணிபாராட்டுகளை பெறும். மரியாதையும் புகழும் கூடும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
மகரம்:
மகர ராசியில் சனிபகவான் 11 ஆவது வீட்டில் பிற்போக்கு நிலையில் இருக்கிறார். மகரம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் துவங்கியுள்ளன. இது வீடு வருமானம் மற்றும் லாபத்திற்கான ஸ்தானமாக கருதப்படுகிறது.
எனவே, இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இதன் மூலம் நீங்கள் பெரும் பணத்தைப் பெறலாம்.
தனுசு:
சனி பகவானின் அருளால் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
இந்த காலத்தில் சில பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் சாதகமான விளைவுகள் கிடைக்கும்.