சனிப்பெயர்ச்சி பலன்கள்... இந்த 2 ராசியினர்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமாம்!
சனிப்பகவான் கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். இதனால் சனியின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கடகம்
கடக ராசிக்கு சனி திசையானது ஆரம்பித்துவிட்டது. இவை இரண்டரை ஆண்டுகள் நீடிக்கும். இந்த காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
தொழில், கல்வியில் சிரமங்கள் ஏற்படலாம். மேலும், பண இழப்பு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.
நோய்கள் உடலை தாக்கக்கூடும். ஆகையால் இந்த அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர்களுக்கு சனியின் திசை துவக்கமாக இருக்கும்.
அடுத்து இரண்டரை ஆண்டுகள் இந்த ராசிக்காரர்களுக்கு கடினமாகவே இருக்கும். இதனால், சனி திசை, மற்றும் ஏழரை நாட்டு சனி செல்வம், ஆரோக்கியம் மற்றும் கௌரவத்தை இழக்க வைக்கும்.
இதைத்தவிர, முன்னேற்றத்தில் தடைகள் மற்றும் உறவுகளில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம்.
பலன்கள்
சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருகிறார். ஆகவே நல்ல செயல்களை செய்து, ஜாதகத்தில் சனி சுபமான இடத்தில் உள்ளவர்களுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் கெட்ட தாக்கம் இருக்காது.
இதனால், ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் போது, அனைவரும் தாங்கள் செய்யும் செயல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஆதரவற்றோர், பெண்கள், முதியவர்களை அவமதிக்கக் கூடாது. இவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்.
