திடீர் அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் சனி பகவான்: இந்த தீபத்தை ஏற்றுவது சரியா?
ஜோதிடப்படி ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டங்களையும், துரதிஷ்டங்களையும் தேடித் தருபவர் சனிபகவான்.
சனிபகவானை போன்று கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்பது பழமொழி, இதற்கு ஏற்ப சனி பகவானின் மாற்றத்தை கண்கூடாகவே பார்க்கலாம்.
சனிபகவானுக்கு எந்த மாதிரியான பரிகாரங்களை செய்ய வேண்டும், செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
எள் தீபம் ஏற்றலாமா?
எள் கொண்ட தீபம் ஏற்றினால் சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும் என்பது காலங்காலமாக பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இதற்கிடையே எள் தீபம் ஏற்றக்கூடாது என ஒருதரப்பினர் கூறுகின்றனர், ஏனெனில் எள்ளை தீபமாக எரித்தால் எதிர்மறை ஆற்றல்கள் வெளிவரும், எனவே எள் தீபம் ஏற்றக்கூடாது என கூறுகின்றனர்.
இதுதவிர உடல் சூட்டை அதிகரிக்க கூடிய எள்ளை கொண்டு தீபமேற்றினால், எந்த விதத்திலும் நன்மை பயக்காது என்றும் கூறுகின்றனர்.
எனினும் மிகுந்த பய பக்தியுடன் எள் எண்ணையோ, எள் தீபமோ ஏற்றி வழிபட்டால் சனி பகவானின் அருள் நிச்சயம் கிடைக்கும், தீபம் ஏற்றியதற்கான பலன்களும் நிச்சயம் கிடைக்கும் என உறுதிபடக்கூறுகின்றனர் பக்தர்கள்.