Sandhya Raagam: கைவிட்டுச் செல்லும் ரகுராமின் பூர்வீக வீடு... மாஸ் எண்ட்ரி கொடுத்து காப்பாற்றிய மாயா
சந்தியா ராகம் சீரியலில் ரகுராமின் வீடு கைவிட்டுச் செல்லும் நிலையில், மாயா தனது சாமர்த்தியத்தால் வீட்டை மீட்டுள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கின்றது. இதன் கதைக்களம் மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கின்றது.
ஒரு உயிராக வாழ்ந்து வந்த அக்கா தங்கைகள், திருமணத்தால் பிரிகின்றனர். அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளையை தங்கை திருமணம் செய்துவிட்டு ஊருக்கு வரவே, திருமண கோலத்தில் இருந்த அக்காவிற்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
பின்பு அத்தை மகனான ரகுராமை ஜானகிக்கு அவசர திருமணம் செய்து வைக்கின்றனர். காதலனை கரம்பிடித்த தங்கை சந்தியா வெளிநாட்டில் வாழ்ந்து வந்தார். ரகுராமை காதலித்து வந்த முறைபெண் புவனேஷ்வரி ஏமாற்றம் தாங்க முடியாமல் குடும்பத்தினை பழிவாங்க தற்போது வரை திட்டமிட்டு வருகின்றார்.
பின்பு சில ஆண்டுகள் கழித்து புற்றுநோய் காரணமாக சந்தியா இறந்துவிடவே, அவரது மகள் மாயாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ஜானகி.
ஆரம்பத்தில் ஜானகியையும், குடும்பத்தையும் பிடிக்காமல் இருந்த மாயா சீனு மீது காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார்.
இருவரும் பிரிவு
ஜானகியின் பெண் தனத்தின் திருணமத்தில் புவனேஷ்வரியின் சூழ்ச்சியினைக் கண்டுபிடித்த மாயா, தனத்திற்கு தனது சொந்தத்தில் இருந்த கதிரை திருமணம் செய்து வைத்தார்.
இதற்கான உண்மை ஜானகிக்கு மட்டும் தெரிந்த நிலையில், சீனு உட்பட வீட்டில் அனைவரும் மாயாவை ஒதுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் சீனு மாயாவிடம் வாங்கிய கடனை அடைப்பதற்கு வெளியே கடன் வாங்க சென்ற நிலையில், அங்கு அவரை ஏமாற்றி புவனேஷ்வரி வீட்டை எழுதி வாங்கியுள்ளார்.
கடைசி நிமிடத்தில் ரகுராம் குடும்பம் வீட்டை காலி செய்து சாவியை புவனேஷ்வரியிடம் கொடுக்க சென்ற போது, மாஸாக வந்த மாயா அதனைத் தடுத்துள்ளார்.
பின்பு வீட்டை புவனேஸ்வரி ஏமாற்றி வாங்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில், சீனு மாயாவிடம் மன்னிப்பு கேட்டு ஒன்று சேர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |