நெற்றியில் வைக்கும் குங்குமத்தில் இவ்வளவு ஆபத்தா? பெண்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமம் முடி உதிர்வு மற்றும் சரும பிரச்சனையை ஏற்படுத்துமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குங்குமம்
குங்குமம் இந்து மதத்தில் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் மங்களகரமான அறிகுறி ஆகும்.
குங்குமத்தில் சல்பேட், பாதரசம், ஈயம் ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இவை சருமத்திற்கும் முடிக்கும் தீங்கு விளைவிக்கும். மேலும் தொற்று மற்றும் ஒவ்வாமையை இது ஏற்படுத்தும்.
ரசாயனம் கலந்த குங்குமம் முடி உதிர்தலை ஏற்படுத்துமாம். பின்பு படிப்படியாக வழுக்கையாகவும் வாய்ப்பு இருக்கின்றதாம். இதை தொடர்ந்து பயன்படுத்தினால் முடியின் வேர்கள் பலவீனமாகும்.
சல்பேட், ஈஸ்ட் போன்ற ரசாயனங்கள் கொண்ட குங்குமத்தால் அரிப்பு, எரிச்சல் மற்றும் தடுப்புகளும் ஏற்படுகின்றது. இது நீண்டகால பயன்படுத்தும் போது புற்றுநோய் அபாயத்தையும் ஏற்படுத்துகின்றது.
கேமிலியா செடியின் விதைகளில் இருந்து தான் ஒரிஜினல் குங்குமம் தயாரிக்கப்படுகின்றது. இது முடி மற்றும் சருமத்திற்கு எந்தவொரு தீங்கையும் ஏற்படுத்தாது என்றும் முற்றிலும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகின்றது.
மூலிகை குங்குமம் மிகவும் பாதுகாப்பானது. இது எந்த வகையான ஒவ்வாமை அல்லது தீங்கையும் ஏற்படுத்தாது. இதனை வீட்டிலேயே தயார் செய்யலாம்.
குங்குமம் தயாரிப்பது எப்படி?
மஞ்சள் - 2 ஸ்பூன்
ரோஜா இதழ்கள் - 4
ரோஸ் வாட்டர் - 4 சொட்டு
எலுமிச்சை சாறு - சிறிதளவு
இவை அனைத்தையும் நன்றாக கலந்து அரைக்க வேண்டும். இந்த குங்குமம் சருமத்திற்கு மிகுந்த பலனை அளிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |