Sandhya Raagam: கதிர் ஆரம்பிக்கும் புதிய கம்பெனி... ரகுராம் திறப்பு விழாவிற்கு செல்வாரா?
சந்தியா ராகம் சீரியலில் ரகுராம் மிகவும் வசதியாக வாழ்ந்த தனது மகள் கதிரால் கஷ்டப்படுவதாக கூறி அவரை சரமாரியாக பேசியுள்ளார்.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கின்றது. இதன் கதைக்களம் மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கின்றது.
ஒரு உயிராக வாழ்ந்து வந்த அக்கா தங்கைகள், திருமணத்தால் பிரிந்தாலும், அவர்களின் பிள்ளைகள் தற்போது அக்கா தங்கைகளாக வாழ்ந்து வரும் கதையைக் கொண்டுள்ளது.
தனத்திற்கு வரும் ஒவ்வொரு பிரச்சனையின் போதும் மாயா தான் அவரைக் காப்பாற்றுகின்றார். இது ரகுராமிற்கு தெரியாமல் இதை செய்து வரும் மாயா கெட்டப்பெயர் எடுத்து வருகின்றார்.
தற்போது கதிர் கேஸ் சிலிண்டர் போடும் வேலையை செய்து வரும் நிலையில், ரகுராம் வீட்டிற்கு கேஸ் போடுவதற்கு வந்துள்ளார். அப்பொழுது ரகுராம் கதிரின் தற்போதை ஏழ்மையைக் குறித்தும், தனது மகள் வாழ்ந்த வாழ்க்கை குறித்தும் பேசியுள்ளார்.
இதனால் கதிர் ஒரு கேஸ் ஏஜென்சி ஆரம்பிக்க முடிவு செய்து அதன் திறப்பு விழாவிற்கு ரகுராமை அழைப்பதற்கு தனக்கு உதவி செய்தவரை அனுப்பி வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
