Sandhya Raagam: தனாவை கடத்திய கார்த்திக்! மாயா, கதிர் என்ன செய்யப் போகிறார்கள்?
சந்தியா ராகம் சீரியலில் தனாவை பழிதீர்க்க காத்திருந்த கார்த்திக் தற்போது அவரை கடத்தியுள்ளார். மாயா கதிர் இருவரும் அவரை தேடி வருகின்றனர்.
சந்தியாராகம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சந்தியாராகம் சீரியல் ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கின்றது. இதன் கதைக்களம் மிகவும் சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கின்றது.
ஒரு உயிராக வாழ்ந்து வந்த அக்கா தங்கைகள், திருமணத்தால் பிரிகின்றனர். அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளையை தங்கை திருமணம் செய்துவிட்டு ஊருக்கு வரவே, திருமண கோலத்தில் இருந்த அக்காவிற்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
பின்பு அத்தை மகனான ரகுராமை ஜானகிக்கு அவசர திருமணம் செய்து வைக்கின்றனர். காதலனை கரம்பிடித்த தங்கை சந்தியா வெளிநாட்டில் வாழ்ந்து வந்தார்.
ரகுராமை காதலித்து வந்த முறைபெண் புவனேஷ்வரி ஏமாற்றம் தாங்க முடியாமல் குடும்பத்தினை பழிவாங்க தற்போது வரை திட்டமிட்டு வருகின்றார்.
பின்பு சில ஆண்டுகள் கழித்து புற்றுநோய் காரணமாக சந்தியா இறந்துவிடவே, அவரது மகள் மாயாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ஜானகி.
ஆரம்பத்தில் ஜானகியையும், குடும்பத்தையும் பிடிக்காமல் இருந்த மாயா சீனு மீது காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார்.
தனாவை கடத்திய கார்த்திக்
சமீபத்தில் புவனேஷ்வரி ரகுராம் வீட்டை ஏமாற்றி வாங்கி வெளியே அனுப்ப தயாராக இருந்த நிலையில், கடைசி நொடியில் மாயா உண்மையை அம்பலப்படுத்தி வீட்டை காப்பாற்றினார்.
இந்நிலையில், தனாவின் கணவர் கதிருக்கு விபத்து என்று பேசியது கார்த்திக் என்று தெரியாமல் தனம் வந்துள்ள நிலையில் அவரை கடத்தியுள்ளார்.
மற்றொரு புறம் சீனுவிடமிருந்து மாயாவை பிரித்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க சீனுவின் அம்மா திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு பரபரப்பான கதை களத்துடன் செல்லும் இந்த சீரியலில் தனம் எவ்வாறு காப்பாற்றப்படுவார்? மாயாவின் வாழ்க்கை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |