இரும்பு உதிரி பாகங்களை பயன்படுத்தி 14 அடி உயர பிரதமர் மோடி சிலை - 600 மணி நேரத்தில் உருவாக்கிய தந்தை மகன்!
பழைய இரும்பு பொருட்களை பயன்படுத்தி 14 அடி உயர பிரதமர் மோடியின் சிலையை தந்தையும், மகனும் உருவாக்கியுள்ளனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ்.
இவர் தனது மகன் ரவிச்சந்திரனுடன் சுமார் 600 மணி நேரம் உழைத்து உதிரிபாகங்களை வைத்து பிரதமர் மோடியின் சிலையை உருவாக்கி இருக்கிறார்.
சைக்கிள் செயின், இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள், கார் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பழைய இரும்பு பொருட்கள் என சுமார் 2 டன் எடையுடைய பல்வேறு பழைய இரும்பு பொருட்களை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடியின் 14 அடி உருவ சிலையை தயார் செய்திருக்கிறார். இந்தச் சிலையை பெங்களூரில் காட்சிப்படுத்த அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்.