இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி குச்சியால் கொடூரமாக தாக்கிய இளைஞர்கள் - அதிர வைத்த சம்பவம்!
இந்தியாவில் இளம்பெண் ஒருவரை நான்கு இளைஞர்கள் சேர்ந்து அப்பெண்ணை நிர்வாணப்படுத்தி குச்சியால் சரமாரியாக தாக்கிய வீடியோ சமூவலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் யாத்கிரி நகர் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனையடுத்து, போலீசார் வீடியோவை ஆதாரமாக வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போது வீடியோவில் உள்ள 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவம் 1 வருடத்திற்கு முன் நடந்தது என்பது தெரியவந்துள்ளது. பேருந்திற்காக காத்திருந்த பெண்ணை 4 இளைஞர்கள் கடத்திச் சென்று நிர்வாணப்படுத்தி குச்சியால் தாக்கியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் தன்னை விட்டுவிடும்படி அந்த பெண் ரொம்ப கெஞ்சுகிறாள். ஆனால், அவர்கள் அப்பெண்ணை, உன்னை எரித்தாலோ, கொன்றாலோ யாருக்கும் தெரியாது என்று மிரட்டுகிறார்கள்.
பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கியது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் 4 இளைஞர்கள் சேர்ந்து இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.