நடிகை சமந்தாவுக்கு அரிய வகை தோல் நோயா? ஷாக்கில் ரசிகர்கள் - காட்டுத் தீயாய் பரவும் தகவலின் பின்னணி
பிரபல நடிகை சமந்தா அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவி வரும் தகவல் உண்மை இல்லை என்று சமந்தாவின் மேலாளர் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்தாண்டு தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.
திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விவாகரத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்கள் மீது கவனம் செலுத்தி வந்தார்.

தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்திருந்தார்.
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வரும் சமந்தாவின் உடல்நிலை குறித்து சில நாட்களாக ஒரு தகவல் பரவி வந்தது.
காட்டுத் தீயாய் பரவும் வதந்தி
அதாவது அவர் அரிய வகை தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா சென்று சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
அதேசமயம் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் வெறும் வதந்தி என சமந்தாவின் மேலாளர் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய மகேந்திரா, "சாம் மீது வரும் வதந்தி உண்மையில்லை. அவர் நலமாக இருக்கிறார்.

இவை வெறும் வதந்திகள் என்பதால் அதனை யாரும் தயவு செய்து நம்ப வேண்டாம்.
அவர் தற்போது அமெரிக்காவில் பயணத்தில் இருக்கிறார்” என்றார்.