முன்னாள் கணவர் நினைவாக இருந்த கடைசி விஷயத்தையும் நீக்கிய சமந்தா! அவரே வெளியிட்ட பதிவு
நடிகை சமந்தாNothing to Hide என குறிப்பிட்டு வித்தியாசமான முறையில் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து ரக்ட் பிரம்மாண்டம் என்ற வெப் தொடரில் நடிக்க உள்ளார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டிகே இணைந்து இயக்குகிறார்கள். நடிப்பை தொடர்ந்து தற்போது சொந்தமாக தயாரிப்பில் இறங்கி உள்ளார். அந்த வகையில், சுபம் என்ற படத்தை தயாரித்தார்.
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.
கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது தனது முன்னாள் கணவர் நினைவாக தனது முதுகில் குத்தியிருந்த YMC என்கிற டாட்டூவை நீக்கியுள்ளார். நாக சைதன்யாவுடன் சமந்தா இணைந்து நடித்த முதல் படம் 'யே மாய சேசாவே' இப்படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும்போது காதல் மலர்ந்ததால், அப்படத்தின் நினைவாக YMC என்கிற டாட்டூவை தனது முதுகில் குத்தியிருந்தார் சமந்தா.
ஆனால், தற்போது விவாகரத்ததாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்த டாட்டூவை நீக்கியுள்ளார்.அந்த காணொளியை பதிவிட்டு Nothing to Hide என்று எழுதுகிறார்.குறித்த காணொளி தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |