யாருடனும் அந்த படத்தை விளம்பரப்படுத்தப் போவதில்லை... சமந்தா எடுத்த அதிரடி முடிவு!
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா நடித்துள்ள 'யே மாயா சேசாவே' திரைப்படம் ஜூலை 18, 2025 அன்று மீண்டும் வெளியிடப்பட உள்ளது. படத்தின் விளம்பரத்திற்காக முன்னாள் ஜோடி மீண்டும் இணையக்கூடும் என்று வதந்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமந்தா
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.
கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் முதிர்ச்சியான நிதானத்துடன் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.
இந்நிலையில் ரீ-ரிலீஸ் ஆகும் விடிவி தெலுங்கு வெர்ஷன் 'யே மாய சேசாவே' மறுவெளியீட்டு அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து பெற்ற பின்னர் எந்த மேடையையும் பகிர்ந்துக்கொள்ளாத நாக சைதன்யாவும் சமந்தாவும் மீண்டும் இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக மீண்டும் ஒன்றாகத் தோன்றுவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இருப்பினும், யாருடனும் படத்தை விளம்பரப்படுத்தப் போவதில்லை என்று சமந்தா தெளிவுபடுத்தியுள்ளார். அவர், குறிப்பிடுகையில் "இல்லை, நான் யாருடனும் 'யே மாயா சேசாவே' திரைப்படத்தை விளம்பரப்படுத்தவில்லை.
அந்த படத்தை விளம்பரப்படுத்தவும் எனக்கு விருப்பம் இல்லை. இந்த பேச்சு எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. தயவு செய்து தேவையில்லாத வதந்திகளை பரப்பாதீங்க".என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சமந்தாவும் நாக சைதன்யாவும் 'யே மாயா சேசாவே' படத்தின் விளம்பரங்களுக்காக மீண்டும் இணையவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |