சினேகன் - கன்னிகா இரட்டை குழந்தைகளுக்கு குலதெய்வ கோவிலில் நடந்த விசேஷம்: குவியும் வாழ்த்து
சினேகன்- கன்னிகா இருவரும் தங்களது இரட்டை குழந்தைகளுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி மொட்டை போட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினேகன்-கன்னிகா
தமிழ் சினிமாவில் நிறைய ஹிட் பாடல்களை எழுதி பாடல் ஆசிரியராக தனது அற்புதமான வரிகள் மூலம் ரசிகர்களில் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் சினேகன்.
பிரபல பாடலாசிரியரான சினேகன் 'பாண்டவர் பூமி' படத்தில் எழுதிய அவரவர் வாழ்க்கையில், தோழா தோழா ஆகிய பாடல்கள் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார்.
70 திரைப்படங்களுக்கு பாடல் எழுதி இருக்கும் சினேகன், தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத பாடல் ஆசிரியராக இருக்கிறார். இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், பல வெற்றிப்பாடல்களை எழுதியது இவர் என பலருக்கு தெரியவந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்,கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.
இதற்கிடையில், சினேகன் கடந்த 2021ம் ஆண்டு தனது நீண்டநாள் காதலியான கன்னிகாவை திருமணம் செய்துகொண்டார்.
சினேகனின் மனைவி கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில், சமீபத்தில் அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. பெண் குழந்தைகளுக்கு சினேகன் கமல்ஹாசன் முன்னிலையில் அழகான தமிழ் பெயர் வைத்தார்.
இந்த நிலையில் தற்போது தங்களது இரட்டை குழந்தைகளுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி மொட்டை போட்ட நெகிழ்சியான தருணத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். குறித்த காணொளி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |