சளி தொல்லையில் இருந்து எளிதில் விடுபட வேண்டுமா? இதோ எளிய டிப்ஸ்
நமது சித்தர்கர்கள் சிறு நோய்கள் முதல் பெரு நோய்கள் வரை பலவற்றிற்கு மிக எளிய மருந்தை கண்டுபிடுத்துள்ளனர். இதை தான் நாம் பாட்டி வைத்தியம் அல்லது கை வைத்தியம் அல்லது சித்த மருத்துவம் என்கிறோம்.
சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதில் கற்பூரத்தை போட்டு நன்கு சுடவைத்து பின் சிறிது நேரம் ஆறவைத்து அதை நெஞ்சில் தடவினால் சளி தொல்லை நீங்கும்.
பொதுவாக மஞ்சள் ஒரு மிக சிறந்த கிருமி நாசினி என்பது நாம் அறிந்ததே. பாலோடு மஞ்சள் சேர்கையில் அது மருந்தாக மாறுகிறது. பாலை நன்கு காய்ச்சி அதில் சிறிது மஞ்சளை சேர்த்து பருகுவதன் மூலம் சளி தொல்லை நீங்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம்.
இஞ்சி, வறண்ட இருமலை எளிதில் நீக்கக்கூடியது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து, அதில் சிறிது உப்பைத் தூவவும். உப்பு கலந்த இஞ்சியை சில நிமிடங்களுக்கு நன்கு மெல்லவும். இஞ்சியோடு துளசி இலையையும் சேர்த்துக்கொண்டால், சளி, இருமலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
தூய்மையான தேன் மூலமும் சளியை குணப்படுத்தலாம். 100மி.லி தேனை எடுத்துக்கொண்டு அதை வாணலியில் ஊற்றி அதன் அடர்த்தி குறையும் வரை நன்கு சூடாக்கவும். பின்பு அதில் எலுமிச்சை சாறு மற்றும் லவங்கப்பட்டையை சேர்த்து பயன்படுத்திவர சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.
பொதுவாக வெங்காயம் சளியை அதிகரிக்கும் என்று பலர் கருதுவதுண்டு. ஆனால் வெங்காயத்தின் மூலமும் சளியை சரி செய்யலாம். ஒரு வெங்காயத்தை எடுத்து கொண்டு அதை உரித்து பின் நன்கு நசுக்கிக்கொள்ளவேண்டும். அதோடு எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். பின் அதோடு ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பின் இதனை ஆறவைத்து பருகினால் சளி தொல்லை நீங்கும்.