பேரதிர்ச்சி... விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்ற இளம் நடிகர் கோமாவில்! கதறும் ரசிகர்கள்
விநாயகர் சதுர்த்தி அன்று பைக் விபத்தில் சிக்கிய நடிகர் சாய் தரம் தேஜ் இன்னும் கோமாவில் இருப்பதாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரி மகனான நடிகர் சாய் தரம் தேஜ் விநாயகர் சதுர்த்தி அன்று தன் ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.
பைக் ஸ்கிட்டாகி கீழே விழுந்த சாய் தரம் தேஜ் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்து சாலையில் கிடந்த சாய் தரம் தேஜுக்கு அந்த வழியாக சென்ற யாரும் உதவி செய்யவில்லை.
ஷாப்பிங் மாலில் வேலை செய்த அப்துல் என்பவர் தான் உதவினார். சாய் தரம் தேஜ் மருத்துவமனையில் இருக்கிறார் என்பது மட்டுமே ரசிகர்களுக்கு தெரியும். இந்நிலையில் சாய் தரம் தேஜின் நிலைமை குறித்து அவரின் மாமாவும், நடிகருமான பவன் கல்யாண் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
பவன் கல்யாண் கூறியதாவது, சாய் தரம் தேஜ் பொறுப்பில்லாமல் பைக் ஓட்டியதால் ஸ்கிட்டானது என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மை என்று நான் நினைக்கவில்லை.
இந்த நாட்டில் பல பிரச்சனைகள் இருக்கிறது. அவற்றை பற்றி பேச வேண்டும். தேஜ் இன்னும் கோமாவில் தான் இருக்கிறார். இதுவரை கண்ணை திறக்கவில்லை. அவரை பற்றி பேசக் கூடாது என்றார்.
சாய் தரம் தேஜ் கோமாவில் இருப்பது தெரிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரின் நிலைமை குறித்த உண்மையை இதுவரை ஏன் யாரும் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சாய் தரம் தேஜ் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.