என் மகன் வராததற்கு இதுதான் காரணம்! உண்மையை போட்டுடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்
தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் சஷ்டியப்த பூர்த்தி விழாவில் விஜய் கலந்து கொள்ளாதது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதில் இடம் பிடித்து தனக்கென்று அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.
சமீபத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது.
இப்படம் வசூலில் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.
சஷ்டியப்த பூர்த்தி விழா
சமீபத்தில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.சந்திரசேகருக்கும், தாய் ஷோபாவிற்கும் திருக்கடையூரில் சஷ்டியப்த பூர்த்தி விழா நடந்தது.
தன்னுடைய 80வது மணிவிழாவையும் மிகவும் எளிமையாக நடத்தி முடித்தார். ஆனால், இந்த விழாவிற்கு விஜய் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் யாரும் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
எஸ்.ஏ.சந்திரசேகர் தங்களுடைய மணி விழா புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, 80 வயது பூர்த்தி... திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு யாகபூஜை செய்து சாமி தரிசனம் செய்தோம் என பதிவிட்டுள்ளார். தற்போது இவர்களது சஷ்டியப்த பூர்த்தி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய்யை விமர்சித்த நெட்டிசன்கள்
அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள், என்னதான் பணம், புகழ் இருந்தாலும் தன் மகன், பேரப்பிள்ளைகள் இல்லாத சோகம் இவர்கள் இருவர் முகத்தில் உள்ளது.
மகன் மருமகள் பேரன் எல்லாரும் சேர்ந்து சிறப்பாக நடத்தி வைக்கக்கூடிய பங்க்ஷன் இது, ஆனால் இப்போ இதை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இவ்வளவு சுயநலவாதியா இருக்கக்கூடாது மிஸ்டர் விஜய் என்று சமூகவலைத்தளங்களில் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
விஜய் வராதது ஏன்?
தற்போது எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி ஒன்றில் இதுகுறித்து கூறுகையில், கடந்த ஜூலை 2ம் தேதி ஐதராபாத்தில் ஷூட்டிங்.
அதனால் என் மகன் ஜூலை 1ம் தேதியே ஹைதராபாத் சென்றுவிட்டார். அங்கு ஷூட்டிங் இருந்ததால் தான் அவரால் என் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது என்றார்.
