சபரிமலை மகரஜோதி ரகசியம் இதோ... யார் ஏற்றுகிறார்கள் தெரியுமா? - மகர ஜோதி சரியான நேரம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி காட்சி மிக முக்கிய நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள், மகர விளக்கு பெருவிழா மகர ஜோதியுடன் நிறைவடைவது வழக்கம்.
அந்த வகையில் நாளை தை மாதம் தொடங்குகிறது. அதாவது கேரளா முறைப்படி மகர ராசியில் சூரியன் வரும் இந்த மாதத்திற்கும் மகர மாதம் என்று பெயர். இந்த மாதத்தின் முதல் நாள் சபரிமலையில் மகர ஜோதி காட்சி கிடைப்பது வழக்கம்.
மகர ஜோதி:
அன்றைய தினம் பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி காட்சி கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தை மாதம் முதல் நாள் மாலை 6.30 மணி அளவில் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும். இதைப் பார்க்க கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் லட்சக்கணக்கில் வருவது வழக்கம்.