ரஷ்யாவில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு! ஒரே நாளில் 986 பேர் உயிரிழப்பு
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் இதுவரை பரவி கொண்டிருந்தாலும், தடுப்பூசி செலுத்திகொண்ட நாடுகளில் கொரோனாவின் வீரியம் உயிரிழப்புகள் குறைவாகவே உள்ளது.
இதனையடுத்து, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு உயிரிழப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மேலும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க ரஷிய அரசு தயங்கி வருகிறது.
இந்த நிலையில், ரஷியாவில் கடந்த சில நாட்களாக ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு புதிய உச்சமடைந்துள்ளது. அந்நாட்டில் கடந்த 12-ந்தேதி ஒரே நாளில் 28 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால், அந்நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 லட்சத்து 80 ஆயிரமாக அதிகரித்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோல், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக கடந்த 12-தேதி ஒரே நாளில் 973 பேர் உயிரிழந்தனர். ரஷியாவில் பதிவான அதிகபட்ச ஒரு நாள் கொரோனா உயிரிழப்பு இதுவாகும்.
இதனால், அந்நாட்டில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 345 ஆக அதிகரித்தது.
தற்போது, ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மீண்டும் அதிகரித்து உள்ளது. இதன்படி, கொரோனாவுக்கு ஒரே நாளில் 986 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.