ரோஜா சீரியலில் மாமியார் காயத்ரிக்கு இவ்வளவு பெரிய மகளா? வாவ்... அம்மாவையும் மிஞ்சிய பேரழகு..!
மெட்டிஒலி சரோவை அவ்வளவு எளிதில் சின்னத்திரை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.
அந்த சீரியலில் இவர் அனுபவித்த மாமியார் கொடுமைகள் பல பெண்களின் வாழ்க்கையில் நிஜத்திலேயே நடந்து கொண்டிருந்ததால் பல திருமணமான பெண்கள் மற்றும் தாய்மார்களை ரசிகர்களாக பெற்றிருந்தார் மெட்டி ஒலி சரோ என்கிற காயத்ரி சாஸ்திரி.
மெட்டி ஒலியில் நடிகர் சேத்தனின் மனைவியாக நடித்த நடிகை காயத்ரி சாஸ்திரியின் பூர்விகம் கர்நாடகா என்றாலும் அவர் மும்பையில் தான் பிறந்து, வளர்ந்துள்ளார்.
காயத்ரியின் சகோதரரான சஞ்சய் ஒரு நடிகர். இவரை பார்க்க சென்னை வந்த காயத்திரிக்கு டைரக்டர் சுரேஷ் மேனன் வெள்ளித்திரை வாய்ப்பளிக்க நடிகர் அரவிந்தசாமி, நடிகை ரேவதி, நடிகர் அஜித் நடிப்பில் 1994-ம் ஆண்டு வெளியான பாசமலர்கள் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதல்முறையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பிறகு தல-தளபதி இருவரும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே' திரைப்படத்திலும் நடித்தார். தொடர்ந்து சில திரைவாய்ப்புகள் வந்தாலும் சின்னத்திரையில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தினர் காயத்ரி. தற்போது ரோஜா சீரியலில் அவர் கலக்கி கொண்டிருக்கின்றார்.
தனது செல்ல மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை ஷேர் செய்துள்ள காயத்ரி, நானும் என்னுடையதும். மேக்னட்டிக் எஃபெக்ட் (Me and mine. Magnetic effect) என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
தனது மகளுடன் நடிகை காயத்ரி சாஸ்திரி இருக்கும் ஃபோட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் அதிகளவில் லைக்ஸ் கொடுத்து மற்றும் பாராட்டி கமெண்ட்ஸ் செய்து வைரலாக்கி வருகின்றனர்.