ஒருவேளை சாப்பாடுக்கு கஷ்டப்பட்ட ரோஜா சீரியல் நடிகை... இவரது தங்கை யார் தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான ரோஜாவில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா. இவர் தெலுங்கு திரையுலகில் கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான அந்தாரி பந்துவையா படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார்.
பின்பு சில படங்களில் நடித்த இவர் பின்பு சீரியலில் களமிறங்கினார். 2019ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ரோஜா சீரியல் தான். இந்த சீரியல் மூலம் பிரியங்காவிற்கான ரசிகர் பட்டாளம் அதிகமாகியிருக்கிறது.
இந்நிலையில் பிரியங்கா பேட்டி ஒன்றில் தான் சிறுவயதில் பட்ட கஷ்டத்தினைப் பகிர்ந்துள்ளார். என்னுடைய ஹேண்ட் பேக்கில் எப்போதும் பிஸ்கட் பொட்டலம் ஹேண்ட் இருக்கும் யாரும் பசியால் இருப்பதை நான் விரும்ப மாட்டேன். ஏனென்றால் சிறுவயதில் நான் பல நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். சிறுவயதில் எனக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தது.
அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டு விட்டது. அம்மா ஒரு ஹவுஸ் வைஃப் மூன்று சகோதரிகள். ஒரு நாள் வீட்டில் சாப்பாடு இருக்கும் ஒரு நாள் இருக்காது. நாங்கள் விறகு அடுப்பில் கூட சமைத்து சாப்பிட்டு இருக்கிறோம் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவரது தங்கையின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.