வெளி நாட்டு அரங்கத்தையே அதிரவிட்ட ரோகித் சர்மாவின் முதல் சதம்! கொண்டாடும் ரசிகர்கள்
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனையடுத்து, 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் அற்புதமான தொடக்கத்தைத் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்த நிலையில் ராகுல் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர், ரோஹித்துடன் இணைந்த சேத்தேஷ்வர் புஜாரா துரிதமாக ரன்கள் சேர்த்து இங்கிலாந்துக்கு நெருக்கடி தந்தார். இதனால், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரோஹித்.
இந்திய அணியும் முன்னிலைப் பெற்றது. இந்த நிலையில், மொயீன் அலி ஓவரில் இறங்கி வந்து மெகா சிக்ஸர் விளாசினார் ரோஹித், 205 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த இலக்கை அவர் எட்டினார்.
இதன் மூலம் வெளிநாட்டில் முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். அப்போது ரசிகர்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். 43-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ரோகித் சர்மா டெஸ்டில் 3 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
தற்போது களத்தில், விராட் கோலி 22 ரன்களுடனும், ஜடேஜா 9 ரன்களுடனும் களத்தி உள்ளனர். இந்தியா 270/3 (92) என்று 171 ரன்னில் முன்னிலை வகிக்கிறது.
First century outside India for the Hitman! ?
— Sony Sports (@SonySportsIndia) September 4, 2021
He gets there with a monster six over long on!
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! ?#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #RohitSharma pic.twitter.com/4HDSE276Ow