Siragadikka Aasai: சிந்தாமணியுடன் கூட்டணி சேர்ந்த ரோகினி... முத்து, மீனா எதிர்கொள்ளவது எப்படி?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் உண்மை வீட்டிற்கு தெரியவந்துள்ள நிலையில், அவரை வீட்டுவிட்டு துரத்தவும் செய்துள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பல ஆண்டுகளாக ரோகினி மறைத்து வைத்திருந்த உண்மை தற்போது முத்துவால் அம்பலமாகியுள்ளது.
ஒட்டுமொத்த குடும்பமே பேரதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில், மனோஜ் ரோகியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளியுள்ளார். ரோகினி தனது பக்கம் உள்ள நியாயத்தை கூறினாலும், யாரும் காதில் வாங்கவில்லை.

இந்நிலையில் ரோகினி வெளியே போகும் போது மீனாவை குடும்பத்தினர் முன்பு குற்றவாளியாக நிறுத்தியுள்ளார். இதனால் மீனாவை அனைவரும் ஒதுக்கி வைக்கின்றனர்.
வெளியே அனுப்பப்பட்ட ரோகினி தனது இரண்டு தோழிகள் வீட்டுக்கு சென்ற நிலையில், யாரும் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. பின்பு விஜயாவின் தோழியின் வீட்டிற்கு சென்ற போது அவர் கையில் சிறிது பணம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் முத்து, மீனாவிற்கு ஏற்கனவே வில்லியாக இருக்கும் சிந்தாமணியை சந்தித்துள்ளார். இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்து முத்து, மீனாவை பழிவாங்க தயாராகியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |