விடைப்பெற்றார் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர்! கண்ணீருடன் பேசிய கடைசி வார்த்தைகள்; அரங்கத்தை அதிர விட்ட ரசிகர்கள்
டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ஆன ரோஜர் ஃபெடரர் தன்னுடைய கடைசி போட்டியில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சுவிட்சர்லாந்தில் உள்ள பேசில் என்ற பகுதியில் பிறந்தவர் ரோஜர் ஃபெடரர். இவரின் தந்தை ராபர்ட் ஃபெடரர் ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர். தாய் லினெட் டு ராண்ட் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். இவருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார்.
சிறுவயது முதலே கால்பந்து, டென்னிஸ், பாட்மிண்டன், கிரிக்கெட் என அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கிய ஃபெடரர் அதன் பிறகு டென்னிஸ் தான் தனது வாழ்க்கை என தேர்வு செய்து அதில் முழுநேரமாக ஈடுபட துவங்கினார்.
சாதனை
இதற்காக ஒ ரு நாளில் பல மணிநேரம் வரையில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அதன்பலனாக 1998-இல் ஒற்றயர் மற்றும் இரட்டையர் பிரிவில் ஜூனியர் விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.
அதன்பின் ஆரஞ்சு பௌல் பட்டத்தையும் பெற்று ஐ.டி.எஃ-னால் அவ்வாண்டிற்கான உலகில் சிறந்த ஜூனியர் டென்னிஸ் ஆட்டக்காரராக அங்கீகரிக்க பட்டார்.
தொடர்ந்து, டென்னிஸ் உலகின் பெரும் தலைகளுக்கே சிம்மசொப்பனமாக திகழ்ந்தார் பெடரர். 24 ஆண்டுகால டென்னிஸ் விளையாட்டு வரலாற்றில் 310 வாரங்கள் தொடர்ந்து டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்து அனைவரையும் திகைக்க வைத்தவர் ஃபெடரர்.
ஓய்வு
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக ஃபெடரர் அறிவித்து இருந்தது உலகெங்கிலும் உள்ள டென்னிஸ் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அதன்படி, இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்ற தனது இறுதி போட்டியான லேவர் கோப்பை போட்டியில் பங்கேற்றார் ஃபெடரர். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில், ஃபெடரர், நடால் இணை 6-4, 6-7 (2/7), 9-11 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் டியாஃபோ மற்றும் ஜாக் சாக்விடம் தோல்வியடைந்தது.
more than tennis ❤️ #ThankYouRoger #RogerFederer pic.twitter.com/HWIHGpGICB
— shau. (@fedsipas) September 23, 2022
கண்ணீருடன் உருக்கம்
இதுகுறித்து இறுதியில் பேசிய ஃபெடரர்,. “இந்த நாள் ஒரு அற்புதமான நாள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சோகமாக இல்லை. இங்கே இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது.
நான் என் ஷூக்களை இன்னொரு முறை கட்டி மகிழ்ந்தேன். எல்லாம் இன்றுடன் கடைசியாக முடிந்தது. இங்குள்ள அனைத்து ஜாம்பவான்களுக்கும் எனது நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்த என் மனைவிக்கு நன்றி” என தெரிவித்தார்.
ஃபெடரர் பேசும்போது, அரங்கத்தில் இருந்த 17000 திற்கும் அதிகமான ரசிகர்கள் எழுந்துநின்று கரகோஷம் எழுப்பி தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
If there's one thing you watch today, make it this.#LaverCup | @rogerfederer pic.twitter.com/Ks9JqEeR6B
— Laver Cup (@LaverCup) September 23, 2022