Restaurant பாணியில் கொண்டைக்கடலை குருமா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!
கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவாக இருக்கும். மேலும் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள பேராடுபவர்களுக்கு கொண்டைக்கடலை ஒரு வரப்பிரசாதம் என்று தான் கூற வேண்டும்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கொண்டைக்கடலையை வைத்து Restaurant பாணியில் அசத்தல் சுவையில் எவ்வாறு மசாலா கிரேவி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டைக்கடலை - 100 கிராம்
தக்காளி - 1
மிளகாய் தூள் - 1 தே.கரண்டி
மல்லித்தூள் - 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/ 2 தே.கரண்டி
மட்டன் மசாலா தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தே.கரண்டி
கசூரி மேத்தி - சிறிதளவு
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க தேவையானவை
தேங்காய் துருவல் - அரை கப்
முந்திரிப்பருப்பு - 10
தாளிக்க தேவையானவை
எண்ணெய் - 3 தே.கரண்டி
பட்டை - 1 இன்ச் அளவு
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
செய்முறை
முதலில் கொண்டைக்கடலையை குறைந்தது 8 மணி நேரம் ஊறவிட்டு, அதனை குக்கரில் போட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பெரிய வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடிப்பொடியாகவும் நறுக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் பச்சை மிளகாயையும் இரண்டாகவும் கீறி வைத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு இரண்டையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கியா வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். - தக்காளி வதங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், மட்டன் மசாலா தூள், கரம் மசாலா பொடி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின்னர் வேக வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து கிளறிவிட்டு, பின்னர் அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இன்னும் சுவையை அதிகரிக்க கொண்டைக்கடலையை வேக வைத்த தண்ணீரை பயன்படுத்தலாம்.
மசாலாவின் பச்சை வாசனை போகும் வரைவயில் வேகவிட்டு, அதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
குருமா கெட்டி பதத்துக்கு வந்ததும், நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கசூரி மேத்தி சேர்த்து நன்றாக கிளறிவிட்டு இறக்கினால், அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் கொண்டைக்கடலை குருமா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |