இந்த ஒரே ஒரு இனிப்பு பொருள் இருந்தா சனி பகவான் நேரில் வந்து பாவங்களை போக்குவார்? ராகுவின் கோர பார்வை திசை மாறும்
தினமும் சிறிது கல்கண்டு பிரசாதமாக வைத்து சாப்பிடுவதால் பல்வேறு ஆன்மிக ரீதியான பலன்கள் மட்டுமல்லாமல், ஜோதிட ரீதியான நன்மைகளும் ஏற்படும்.
கற்கண்டின் மகத்துவம் மற்றும் யாரும் அறிந்திராத அதன் நன்மைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
அண்ட சராசரங்களை அடக்கி ஆளக்கூடிய பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தது கற்கண்டு. அப்படி என்றால் அதன் மகத்துவம் குறைவாக இருக்க முடியும்?...
ஜோதிடத்தில் கற்கண்டு சுக்கிர கிரகத்துடன் தொடர்புடையது என நம்பப்படுகிறது. அதனால் பூஜையில் நைவேத்தியமாகக் கற்கண்டு வைத்து வழிபடுவதால் நம் நிதி நிலைமை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் நம் உடலும், உள்ள வலிமையையும் தருகிறது.
பூஜைக்கு மட்டுமல்லாமல் கற்கண்டு பரிகாரத்திற்கும் உகந்த ஒரு பொருளாகப் பார்க்கப்படுகிறது.
சாப்பிட்ட பிறகு கற்கண்டு சாப்பிடுங்கள்
உணவுக்குப் பிறகு நன்கு, ஐந்து கற்கண்டு தவறாமல் உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இது பேச்சில் இனிமை மற்றும் நன்மைகள் அதிகரிக்கிறது.
கற்கண்டு பயன்படுத்துவதன் மூலம் நம் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை மேம்படும் என்று நம்பப்படுகிறது. சுக்கிரனின் சுப பலன் இருந்தால் தான் ஒருவருக்கு திருமண வாழ்வில் சாதகமான பலன்களைப் பெற முடியும்.
அதைத் தாண்டி திருமணம் என்ற சுப நிகழ்வு நடக்க சுக்கிரனின் அமைப்பு சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
மேலும் சுக்கிரன் சுகத்தையும், ஆடம்பரத்தையும் தரக்கூடியவர் அதனால் உங்களின். நிதிப் பக்கம் சிறப்பாகவும், லாபகரமாகவும் ஆகும். பணப் பற்றாக்குறையை நீங்கி உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் ஏற்படும்.
அருள் கிடைக்கும்
ஆன்மிக நம்பிக்கையின்படி சுக்கிர பகவானின் அருள் பெற மகாலட்சுமியை வணங்குவது அவசியம். அதனால் கற்கண்டு வைத்து மகாலட்சுமியை வணங்கி வருவது அவசியம்.
பூஜையில் வைத்த கற்கண்டு குடும்ப உறுப்பினர்கள் பிரசாதமாக சாப்பிடுவதால் பிணைப்பும், அன்பும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். தினசரி வழிபாட்டில் ஒருமுறையாவது கற்கண்டு பூஜைக்கு பயன்படுத்துங்கள்.
கற்கண்டு பொடி செய்து அரிசி மாவில் கலந்து சனிக்கிழமைகளில் கருப்பு எறும்புகள் இருக்கும் இடத்தில் தூவவும். அந்த கட்டெறும்பு அதை சாப்பிடும் போது, நம் பாவங்களும், பாதகமாக விளைவுகளையும் சனி பகவான் நீக்குவார்.
சனியின் சாதகமற்ற நிலை முடிவடைந்தவுடன், உங்கள் வீட்டில் மீண்டும் செழிப்பு வரத் தொடங்கும்.
தடைப்பட்ட காரியங்கள் நடக்கும், துவண்டு போன வேலை கிடைக்கும். வேலையின்மை என்ற பிரச்னை நீங்கி நிலைமை மங்களகரமானதாக மாறும்.
பெருஞ்சீரகத்துடன் கலந்த கற்கண்டு சாப்பிடுவதன் மூலம், செரிமான சக்தி வலுவடைவதோடு, ராகுவின் பாதகமான விளைவுகள் நீங்கும்.
அதுமட்டுமல்லாமல் ஜாதகத்தில் இருக்கும் புதன் கிரகத்துடனான மோசமான நிலை நீங்கி நன்மை அளிக்கிறது. இது நேர்மறை சிந்தனை மற்றும் அறிவுசார் திறனை மேம்படுத்துகிறது.
குழந்தைகளுக்குத் தினமும் பெருஞ்சீரகம் மற்றும் கற்கண்டு கலந்து வழகினால் அவர்களின் நினைவாற்றல் வலுவடையும் மற்றும் வாசிப்பில் கவனம் அதிகரிக்கும்.