ஏன் இன்னும் திருமணம் ஆகல? நெத்தியடி பதில் கொடுத்த ரெஜினா கசாண்ட்ரா
திருமணம் குறித்து கேள்வியெழுப்பியவர்களுக்கு நடிகை ரெஜினா கசாண்ட்ரா கொடுத்த பதில், சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
ரெஜினா கசாண்ட்ரா
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் ரெஜினா கசாண்ட்ரா.
இவர், தமிழில் கண்ட நாள் முதல் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியிருந்தாலும், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிக்கொண்டார். ஹிந்தியில் சோனம் கபூருடன் இவர் இணைந்து நடித்த ‘ஏக் லட்கி கோ தேகோ தோ ஐசா லகா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். குறித்த திரைப்படம் ஓரினச்சேர்க்கை கதையை மையப்படுத்தி இருந்தமையால் சர்ச்சைக்கு உள்ளானது.
அதன் பின்னர், அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
திருமணம் எப்போது?
இந்த நிலையில், 34 வயதாகும் ரெஜினா கசாண்ட்ராவிடம் திருமணம் பற்றி கேட்பவர்களுக்கு கொடுத்த பதில் இணையவாசிகளிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.
அதாவது, ரெஜினா கசாண்ட்ராவிடம் யாராவது திருமணம் எப்போது? என கேட்டால், அதற்கு சற்றும் யோசிக்காமல், “எப்போ கல்யாணம் பண்ண போற என்று என்னுடைய அம்மாவே கேட்க மாட்டாங்க. அப்படியிருக்கும் போது அந்த கேள்வியை யார் கேட்டாலும்," என்னுடைய அம்மாவே கேட்க மாட்டாங்க, நீங்கள் ஏன் கேட்கிறீர்கள், உங்களுக்கு என்ன என பளீச் என கேட்டுவிடுவேன்..” எனக் கூறியுள்ளார்.
இந்த பதிலை கேட்பவர்கள் அடுத்த முறை திருமணம் குறித்து கேட்கவே மாட்டார்கள் என ரசிகர்களும் ரெஜினாவிற்கு ஆதரவான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |