பாயாசத்தில் இனிப்பு அதிகமாகி விட்டால் உடனே இத பண்ணுங்க.. இனி பயம் தேவையில்லை
பொதுவாக வீடுகளில் பண்டிகை வந்து விட்டால் பயாசம் இல்லாமல் இருக்காது.
பாயாசம் இல்லாவிட்டாலும் கேசரி சரி செய்து விடுவார்கள். இந்த பாயாசத்தில் பல வகைகள் உள்ளன.
சேமியா, ரவை, பருப்பு ஆகிய பொருட்கள் சேர்க்கப்படும் பொழுது பயாசத்தின் சுவை மற்றும் பெயர் மாற்றமடைகிறது. எந்த பாயாசமாக இருந்தாலும் தித்திப்பாக செய்வது வழக்கம்.
வீட்டில் திடீரென ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்றால் கூட சில நிமிடங்களில் பாயாசம் செய்து கொடுக்கலாம். அவசரமாக செய்யும் பொழுது சில நேரங்களில் பாயாசத்தின் இனிப்பு அதிகரித்து விடலாம்.
இதுபோன்ற நேரங்களில், பாயாசத்தின் இனிப்பைக் குறைப்பதற்கு என்ன செய்யலாம் என கவலையுடன் சிலர் யோசித்து கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில், பாயாசம் செய்யும் பொழுது இனிப்பு அதிகமாகி விட்டால் ஒரு சில சமையல் குறிப்புகளை வைத்து இனிப்பை கட்டுக்குள் கொண்டு வரலாம். அப்படி என்னென்ன குறிப்புக்கள் உள்ளன என்பதனை பதிவில் பார்க்கலாம்.
இனிப்பை குறைக்கும் டிப்ஸ்
1. பாயாசம் மிகவும் இனிப்பாக இருந்தால் உடனடியாக கொஞ்சம் தேங்காய் பால் அல்லது தேங்காய் துருவல் சேர்க்கவும். இப்படி செய்தால் இனிப்பு சுவை குறைந்து பாயாசத்தின் சுவை அதிகரிக்கும்.
2. பாயாசத்தில் அளவுக்கு அதிகமாக இனிப்பு இருந்தால் பாதாம் பவுடர் சேர்க்கலாம். ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பாதாம் தூள் சேர்த்து கலந்து விட்டால் இனிப்பு குறையும். அத்துடன் உலர் பழங்களுக்கு சேர்க்கலாம்.
3. சமையல் குறிப்புகளில் உப்பு, இனிப்பை கட்டுப்படுத்தும் பொருட்களில் முக்கியம் பெறுகிறது. ஒரு சிட்டிகை உப்பு சேர்த்தால் இனிப்பு குறைந்து விடும்.
4. பாயாசம் செய்முறையின் போது இனிப்பைக் குறைக்க கசகசா விதை பொடி சேர்க்கலாம். நல்லதொரு மணத்தை கொடுக்கிறது. கசகச மாத்திரம் இருந்தால் நன்றாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடித்து சேர்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |