விஜய் சங்கீதாவை பிரிய இது தான் காரணமா? ஜோதிட விளக்கம்
கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அதை தவறான முறையில் பயன்படுத்தினால் விளைவு மோசமாக இருக்கும்.

கருங்காலி மாலை
கருங்காலி மாலை அணிவது தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது.
சக்தி வாய்ந்த இந்த மாலையை பலர் அணிந்திருந்தாலும், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ், தனுசு, சிவகார்த்திகேயன் ஜி.வி பிரகாஷ் போன்றோர் அணிந்து வருகின்றனர்.

இந்த மாலை மிகவும் சக்தி வாய்ந்தது என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. நம்மை சுற்றியுள்ள மந்திர, தாந்திரீகம் எல்லாம் தற்போது பலரும் நம்புகின்றனர்.
அந்த வகையில் கருங்காலி மாலை அணிவது தாம்பத்திய வாழ்க்கையில் பிரச்சனைகளை கொண்டு வரும் என ஒரு மூட நம்பிக்கை இருந்து வருகின்றது. அந்த வகையில் இதை தவெக தலைவர் மற்றும் விஜய் அணிந்துள்ளார்.

விஜய் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனை
இந்த வருடம் பெப்ரவரி மாதம் விஜய் மனைவி சங்கீதா விஜய்யுடன் வாழ்ந்த 25 வருட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டிருந்தார்.
இதற்கான மனுவை செங்கல்பட்டு குடும்பநல கோர்டில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பிருப்பதாக கூறி இருந்தார்.
மேலும் விஜய்யால் தனக்கு அழுத்தம் வந்தால் நடிகையின் பெயரை குறிப்பிடுவேன் என கூறி இருந்தார். இதனிடையில் விஜய் மற்றும் த்ரிஷாவை வைத்து பலரும் சமூக வலைத்தள பக்கதில் சர்ச்சைகளை கிளப்பி வந்தனர்.
இப்படி விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டாக அவர் அணிந்துள்ள கருங்காலி மாலை காரணம் என கூறப்படுகின்றது. ஆனால் இது தவறு.

கருங்காலி மாலையின் நன்மை
கருங்காலி மாலையானது ஒரு மூலிகை என்றே கூறலாம். இதை அணிந்தால் உடலில் உள்ள நோய் தாக்கம் குறையும், ஆரோக்கியம் மேம்படும். கருங்காலி மரத்தின் கட்டை, பட்டை, வேர், பிசின் உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ சக்தி வாய்ந்தது.
துவர்ப்பு சுவையாக இருக்கும் இந்த மரம் வயிறு சார்ந்த பிரச்னைகளை தீர்க்கும். நீரழிவு நோய்க்கும். இரத்தம் சார்ந்த குறைபாடுகளுக்கும் மருந்தாகச் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஜோதிடப்படி இந்த மரத்திற்கு செவ்வாயின் சக்தி அதிகம், அதனால் செவ்வாய்க்கு சாதகமான ராசி, நட்சத்திரங்கள் மட்டும் அணிய வேண்டும் என கூறப்படுவது தவறு. இந்த கருங்காலி மாலையை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

குறிப்பாக உடல் நல பிரச்னைகள் உள்ளவர்கள் அணிந்து வர ஆரோக்கியம் மேம்படும்.கருங்காலி மாலை மருத்துவ மற்றும் தெய்வீக குணம் கொண்டது.
108 மணிகள் கொண்ட இந்த மாலை அணிவதும், ஜெபம் செய்யவும் பயன்படுத்துவது நல்லது. நேர்மறை ஆற்றலை ஈர்த்து வைத்துக் கொள்ளக்கூடிய அற்புத பொருள் என்பதால் இதனை அசைவம் சாப்பிடும் நாளில் கழற்றி வைத்துவிடுவது நல்லது.
அதே போல பெண்களும் கருங்காலி மாலை அணிந்து கொள்ளலாம். இவர்கள் மாத விலக்கு நாட்களின் போது கழற்றி வைத்து விட்டு, அதன் பின்னர் அணிந்து கொள்ளலாம்.

ஒரு முறை மாலை கழற்றி வைத்த பின்னர் அணியும் போது நீரில் நனைத்து, கழுவி அதை அணிந்து கொள்வது நல்லது. அதே போல இறந்தவர்கள் வீட்டிற்கு செல்லும் போது இந்த மாலையை கழற்றி வைத்துச் செல்வது நல்லது.
எனவே விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைக்கும் இந்த கருங்காலி மாலை அணிந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது வெறும் மூட நம்பிக்கை தான் என்பது தெளிவாகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).