அம்மாவை பார்த்துவிட்டு தான் உயிரை விட்டார்! மெட்டி ஒலி உமாவின் மரணத்திற்கு இதுதான் காரணமாம்!
மெட்டி ஒலி சீரியல் நடிகை உமா மகேஸ்வரி (Uma Maheshwari) உடல் நலக்குறைவு காரணமாக இன்று திடீரென மரணமடைந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தை சேர்ந்தவர்களையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே, இவரின் மரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாகவே மஞ்சள் காமாலை நோயால் இவர் அவதிப்பட்டு வந்ததாகும், இதற்க்கு உரிய சிகிச்சை எடுத்து வந்த போதிலும் தற்போது உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் இவரது ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை வட்டாரத்தை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இவர் பல சீரியல்கள், மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை வனஜாவின் உடன் பிறந்த சகோதரி. இவரால் தான் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்பு உமாவிற்கு கிடைத்தது.
இந்நிலையில், இவரின் இறப்புக்கு சீரியல் நடிகை காயத்ரி பிபிசி தமிழுடன் பேசும்போது, மெட்டி ஒலி சீரியல் எங்கள் எல்லோருடைய வாழ்விலும் திருப்பு முனையாக அமைந்தது. அந்த சீரியலில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஒன்றாக நடித்திருக்கிரோம்.
சீரியல் மட்டுமின்றி நிஜத்திலும் கூட நாங்கள் அக்கா தங்கையாக தான் பழகி வந்தோம். சில நாட்களாகவே உமாவுக்கு உடல் சரியில்லாமல் இருந்து வந்து அவர் இறந்தது எதிர்பாராத ஒன்று.
மேலும், நடிகை அம்மு ராமச்சந்திரன் கூறியதாவது, நானும் உமாவின் அக்கா வனஜாவும் நல்ல நண்பர்கள். அவள் மூலமாகத்தான் உமா எனக்கு அறிமுகமானாள்.
இன்று காலை 7 மணியளவில் அங்கே போய் சேர்ந்ததும், அவள் அம்மாவை பார்த்துவிட்டு, 'வந்துட்டீங்களா?' என கேட்டு விட்டு, குடும்பத்தை கடைசியாக பார்த்த பிறகே அவள் உயிர் பிரிந்திருக்கிறது.
வனஜாவுடன் சேர்த்து அவளுக்கு இரண்டு சகோதரிகள். ஒரு தம்பி. இவள் இரண்டாவது மகள். கணவர் கால்நடை மருத்துவர். இன்னும் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை, என்றார் அம்மு.