ஆர்த்திக்காக இவர் காலில் விழுந்தேன்.. எனக்கு முன்னாள் இவர்தான்! ரவி மோகன் பரபரப்பு
ஆர்த்தியின் குடும்ப மரியாதையை காப்பாற்ற ஒரு நபரின் காலில் விழுந்திருக்கின்றேன் என குறிப்பிட்டு மீடியாவின் முன்னால் குறித்த நபரையும் அறிமுகப்படுத்தியுள்ளது தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவிமோகன் விவாகரத்து சர்ச்சை
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த விவாகரத்து விவகாரத்தில் இரு தரப்பிலும் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு, வழக்கு இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்கிறது.
மனைவி ஆர்த்தி ரவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பாடகி கெனிஷாவுடன் அவரின் நட்பு தொடர்பு இந்த விவகாரத்தை வேறு கோணத்திற்கு திசைத்திருப்பியது.

சில தினங்களாக இணையத்தில் ஆர்த்தி ரவிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கெனிஷாவை தாக்கி நெட்டிசன்கள் பகிர்ந்து வந்த கருத்துக்களால் மனமுடைந்த பாடகி கெனிஷா சென்னையை விட்டும் சமூக ஊடகங்களை விட்டும் வெளியேறுவதாக ஒரு காணொளியை வெளியிட்டார்.
ரவி மோகன் போட்டி
அதனை தொடர்ந்து, இதுவரையில் அமைதியாக இருந்த ரவி மோகன், தற்போது செய்தியாளர்களை சந்தித்து தனது மனதில் இருந்த வேதனைகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறிய தகவல்கள் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்த்தி ரவியை திருமணம் செய்ததில் இருந்தே அனுபவித்த பல துன்பங்கள் குறித்தும் வெளிப்படையாக பகிர்ந்த இவர், பேட்டியின் போது மிகவும் எமோஷனலான ரவி மோகன், தனது திருமண வாழ்க்கையை காப்பாற்ற எவ்வளவு தாழ்ந்து சென்றேன் என்பதை யாருக்கும் தெரியாது என்று கூறினார்.

"என்னுடைய முன்னாள் மனைவியின் குடும்பத்தின் மரியாதை காக்க வேண்டும் என்று நினைத்து நான் ஒரு மனிதரின் காலில் விழுந்தேன்.
அந்த வீட்டில் ஏற்கனவே ஐந்து விவாகரத்துகள் நடந்திருக்கிறது. இனிமேலும் இன்னொரு விவாகரத்து நடந்துவிடக்கூடாது என்று நினைத்துதான் நான் அந்த அளவுக்கு இறங்கி போனேன் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

இதற்கிடையில் அவர் திடீரென, "ஒரு நிமிடம்" என்று கூறிவிட்டு அங்கிருந்த ஒருவரை மேடைக்கு அழைத்து வந்தார். இதனால் செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக குழப்பம் ஏற்பட்டது.
அந்த நபர் யார்?
ஆர்த்தி ரவியின் உறவினரா? முன்னாள் காதலரா? குடும்ப நண்பரா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் அதற்கு தெளிவான விளக்கம் அளிக்காமல், "நான் எப்படி அந்த குடும்பத்தில் கஷ்டப்பட்டேனோ, அதேபோல் கஷ்டங்களை அனுபவித்தவர் தான் இவரும்.

ஆனால் அவர் அந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்துவிட்டார். நான் மட்டும் மாட்டிக்கொண்டேன். என் முன்னாள் மனைவிக்காக இவருடைய காலில் விழுந்தேன்," என்று கூறினார். குறித்த விடயம் தற்போது குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |