திருமணத்திற்கு பின் ரசிகர்களுக்கு மத்தியில் ஜோடியாக ராஷ்மிகா - விஜய்! வைரலாகும் காணொளி
திருமணத்திற்கு பின்னர் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் முதல் முறையாக ஜோடியாக ரசிகர்கள் மத்தியில் வலம்வந்துள்ளார். ஆம், இருவரும் உதய்பூர் விமான நிலையத்திற்கு ஜோடியாக வந்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.
இந்நிலையில்,விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் நேற்றைய தினம் உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.

திருமணம் முடிந்த கையோடு திருமண புகைப்படங்களை ராஷ்மிகா மற்றும் விஜய் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தங்களின் மகிழ்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டனர்.

இந்த நிலையில், திருமணத்திற்கு பின் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் முதல் முறையாக ஜோடியாக வெளியுலகில் தலைக்காட்டிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
திருமணத்தின் பின்னர் இருவரும் உதய்பூர் விமான நிலையத்திற்கு ஜோடியாக வந்த இவர்கள், காரில் இருந்து இறங்கி ஜோடியாக கைகோர்த்து தங்களது ரசிகர்களுக்கு Flying கிஸ் கொடுத்து தங்களின் மகிழ்சியை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
Virosh for the first time after marriage 🥂🤍🧿#Virosh #VijayDeverakonda #RashmikaMandanna pic.twitter.com/HgUgyvB5cV
— Pavan Kumar (@pavankumar__123) February 27, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |