திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இத்தனை கோடியா? வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் நாளை உதய்பூரில் கோலாகலமாக நடக்கவிருக்கின்றது. நேற்றிலிருந்தே அவர்களது திருமண கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் திருமணத்துக்கு பின்னர் இந்த ஜோடி வாழப்போகும் வீடு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் அதன் பெறுமதி குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
ரசிகர்களால் நேஷனல் கர்ஷ் என கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

ரசிகர்கள் இந்த ஜோடியை "Virosh" என்று அழைக்கிறார்கள். ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் அந்த வார்த்தையைக்கு மதிப்பளிக்கும் விதமாக இவர்களின் திருமணத்திற்கு 'The Wedding of VIROSH' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இவர்களின் திருமணம் நாளை 26 ஆம் திகதி உதய்பூரில் நடக்கவிருக்கின்றது. இந்த நிலையில், திருமணத்துக்கு பின்னர் இவர்கள் வாழப்போகும் வீடு தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன.

விஜய் தேவரகொண்டாவுக்கு சொந்தமாக ஹைதராபாத் மாநிலத்தில் இருக்கும் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்திருக்கிறது. அந்த வீட்டின் மொத்த மதிப்பு 15 கோடி ரூபாய் என தகல்கள் வெளியாகி இணையத்தில் குறித்த பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |