சேலையில் ஜொலிக்கும் ராஷ்மிகா மந்தனா! அப்போ நிச்சயதார்த்தம் நடந்தது உண்மையா?
நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைராலாகி வரும் நிலையில், சேலையில் ராஷ்மிகா மந்தனா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை ராஷ்மிகா
ராஷ்மிகா மந்தனா நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.
'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.
தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கி இந்திய சினிமாவில் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து ராஷ்மிகா நடிப்பில் Chhaava என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள்.
ஆனால் அவர்களின் காதல் விவகாரம் குறித்து இதுவரையில் வாய் திறக்கவில்லை. இருப்பினும் அவர்கள் காதலிப்பது உலகறிந்த விடயம் தான்.
இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா -விஜய் தேவரகொண்டாவின் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிச்சயதார்த்த நிகழ்வில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும் இது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா அல்லது விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து இதுவரையில், எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அழகிய சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் போஸ் கொடுத்து ராஷ்மிகா மந்தனா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |