உயிர் பிழைத்தால் போதும்.... உடல் மெலிந்து ஆளே மாறிய பாகுபலி பட வில்லன்! என்ன ஆனது?
பாகுபலி படத்தில் வில்லனாக, பிரமாண்ட தோற்றத்தில் நடித்து இருந்த நடிகர் ராணாவின் தற்போதைய புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுயுதியுள்ளதுடன், அவரின் உடல் நிலை குறித்து ராணா பகிர்ந்துள்ள விடயமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராணா டகுபதி
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராணா டகுபதி. இவர் தமிழ் சினிமாவில், உச்சநட்சத்திரமாக திகழ்ந்து வரும் அஜித் நடித்த ஆரம்பம் படம் மூலமாக அறிமுகமானார்.

இந்தப் படத்தில் அஜித்தின் நண்பனாக நடித்திருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் ஹிட் அடித்தது.
அதனை தொடர்ந்து, தமிழில் பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா, காடன் உள்ளிட்ட படங்களில் நடித்துதார்.

கடைசியாக ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரியளவில் பேசப்படவில்லை.

இவரின் திரைப்பயணத்தில் பெரும் திருப்பத்தை கொடுத்த படம் என்றால், அது 'பாகுபலி' தான். கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் வில்லனாக நடித்து அசதியிருப்பார். பாகுபலி பாகம் 2 லும் இவர் தான் வில்லன்.
அதில் அவரின் தோற்றம் வில்லன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் காட்டும் விதமாக இருக்கும். அவர் 6.2 அடி உயரம், 120 கிலோ எடை என மிரட்டலான லுக்கில் அப்போது இருந்தார்.

ஆனால் பாகுபலி 2 ரிலீசுக்கு பிறகு ராணா ஆளே மாறிவிட்டார்.அவர் உடல் மெலைிந்து ஆளே மாறிப்போன புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ராணா ஓபன் டாக்
இது குறித்து ராணா குறிப்பிடுகையில், தான் பாகுபலி 2 வெளியீட்டுக்கு பின்னர் கிட்னி failure மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்ததாகவும், கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் இருந்தும் வெளியேறி அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த நேரத்தில் தனது இமேஜ், ஸ்டார் அந்தஸ்து போன்றவற்றில் எல்லாம் தனது கவனம் இருக்கவில்லை, உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலையில் தான் இருந்தேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஒரு வருடம் அமெரிக்காவில் சிகிச்சைபெற்று வேறொரு ஆளாக, மிகவும் உடல் மெலிந்த நிலையில், இந்தியா வந்து இறங்கினாராம். தோற்றம் மாறிவிட்டதால் ஒப்புக்கொண்ட படங்களில் கூட நடிக்க முடியாமல் போனது எனவும் ராணா கவலையாக தனது நிலை குறித்து பகிந்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |