Photo album: கணவருடன் தனி தேசத்தில் வாழணும்.. குஷியில் ரம்யா பாண்டியன் போட்ட பதிவு
நடிகை ரம்யா பாண்டியன் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து போட்ட கேப்ஷன் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
ரம்யா பாண்டியன்
தென்னிந்திய பிரபலங்களில் வளர்ந்து வரும் நடிகையாக பார்க்கப்படுபவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
இவர், பிரபல நடிகர்அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ஆவார். சினிமா குடும்பத்திலிருந்து சினிமாவுக்குள் வந்திருந்தாலும் பெரிதாக படவாய்ப்புகள் ரம்யா பாண்டியனுக்கு கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்த ரம்யா பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்வார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவருக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்.
தனி தேசம் வேண்டும்..
இந்த நிலையில் லோகன் தவான் என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளார்.
ரம்யா பாண்டியன் - லோகன் தவான் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இவர்களின் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறப்பாக நடந்து முடிந்தது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, “ நமக்குன்னு ஒரு தேசம் அதில் இருவரும் சேர்ந்து ஒன்றாக வாழ்வோம்..” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
